31 December 2010

ஒரு கை சோர் ஆயின் ஊருக்கு கொடுப்போம்.

நான், என், என்ற எண்ணத்தை எடுப்போம்,
ஒரு கை சோர் ஆயின்  ஊருக்கு கொடுப்போம்.
மனிதனை  தீண்டா மதம் யாவும் வெறுப்போம்,
இறைவன் செய்யும் தீவிரவாதம் ஒழிப்போம்.
நிறபேதம் செய்பவரை  பிடிப்போம்,
அன்பினால் அனைவரையும் அனைப்போம்.
வறுமை, ஏழை, பட்டினி என்பது,
இறந்த காலமென படிப்போம்.
உலகில் பிறந்தது வாழ்வை ரசிக்க,
எதற்கு யுத்தம்  செய்து இறக்க.
பிறரிடம் நீ அன்பு கோர்,
பிறருக்கு நீ அன்பு செய்,
வாழும் அத்தனை நாளும்
அணுவணுவாய்  இன்பம் செய்.

இப்புத்தாண்டு முதல்.

No comments:

Post a Comment