30 July 2010

விண்ணைத்தாண்டி வருவாயா - லொள்ளு

ஹாய் நான் கார்த்திக். நான் சினமாவுல உதவி இயக்குனரா இருக்கேன். இந்த உலகத்துல எத்தனையோ அழகான, சூப்பர் பிகுருங்க இருந்தும் நான் ஏன் சுமார கூட இல்லாத ஜெஸ்ஸி யை காதலிக்கணும். இதுக்கு இதுவரை கூட எனக்கு விடை கிடைக்கலை. ஒரு பொன்னை பார்த்தவுடனே அந்த காதல் நம்மள போட்டு அடிக்கணும், தாக்கனும், நம்மள அப்படியே பொரட்டி போடணும். அது மாதிரி இருந்தது ஜெஸ்ஸி யை நான் முதல் முதல்ல பார்த்தப்ப. அவ என்னை கடந்து போகும் போது என்னை மட்டும் இல்லாம என்னோட கொடலை கூட பொரட்டி போட்டது அவ போட்டுகிட்ட அந்த சென்ட். அவ முன்னாடி எந்த பொன்னும் நிக்க மூடியாது. ஏன் ஒரு ஆம்பளை கூட நிக்க முடியாது. அப்படி ஒரு ஸ்மெல்.


ஒரு நாள் என்னோட காதலை அவகிட்ட சொன்னேன். அடுத்த நாளில் இருந்து அவ காணோம். விசாரிச்சதுல சொந்த ஊரான கேரளா போயிருக்கானு தெரிஞ்சுது. நானும் போனேன். மறுபடியும் ஜெஸ்ஸி யை பார்த்து என்னோட காதலை சொன்னேன். இதுக்காகவா கேரளா வந்தேன்னு கேட்டா. இல்லை நாலாயிரம் கடன் வாங்கிகிட்டு கொலா புட்டும், நேந்திர பழம் சிப்ஸ் சாப்பிட வந்தேன்னு சொன்னேன். அதுக்கு எதுக்கு கேரளா வரணும். சென்னை லையே அம்முகுட்டி சிப்ஸ் கடைல கிடைக்குமே, நியர் கோடம்பாக்கம் நு அவ சொன்னா. நான் ஒரு மொக்கை போட்டேன். பதிலுக்கு அவ ஒரு மொக்கை போட்டா. எதோ ஒன்னு எங்களை ஒன்னு சேர்க்குது. அதுக்கப்புறம் ஜெஸ்ஸி எனக்கு நிறைய அட்வைஸ் செஞ்சா. என்ன விட அவ ஒரு வயசு பெரியவலாம் . இதுல என்ன இருக்கு. நோ ப்ராப்ளம் நு சொன்னேன். நம்ம ரெண்டு பேருக்கும் ஒத்து வராது. நிறைய பிரச்சினை வரும் வேண்டாம், நன்பர்களாவே இருப்போம்னு சொன்னா. அப்பறம் ஒன்னு சொன்னா, நீ தான் கார்த்திக் எனக்கு ப்ரபோஸ் பண்ண முதல் ஆள் நு. அது எனக்கே தெரியுமுன்னு மனசுக்குள்ளே நினைசிகிட்டேன். ஏன்னா என்ன விட ஒரு கேன பயல் இந்தியாவுலையே இருந்து இருக்க மாட்டான். சரி நண்பர்கள் ஆகி அப்புறம் எப்படியாவது காதலை ஏத்துக்க வெச்சிடலாமுன்னு நினைசிகிட்டு சென்னை வந்துட்டேன். இவ்வளவு வேறுபாடுகள் இருந்தும் நான் ஏன் ஜெஸ்ஸி யை காதலிக்கணும் .


அப்புறம் ஒரு நாள் எனக்கு ஜெஸ்ஸி போன் செஞ்சி நாம ரெண்டு பெரும் எங்கயாவது போலாம். மாயாஜால் போகலாமுன்னு சொன்னா. ரெண்டு பெரும் போனோம். நிறைய அவளுக்காக பர்ச்சேஸ் செஞ்சிகிட்டா. லிப்ஸ்டிக், மேக் அப் செட், டிரஸ் இன்னும் நிறைய. சரி போகட்டும் கடைசியில படம் பார்க்கும் பொது எதனா பண்ணிக்கலாமுன்னு நினைச்சி அமைதியாய் இருந்தேன். நான் ரெண்டு பெரும் உள்ளே இருக்கோம். இன்னும் படம் போடலை. கார்த்திக் இதுதான் நான் பார்க்குற ஆறாவது படம் தெரியுமா நு ஜெஸ்ஸி சொன்னா. பரவா இல்லை எனக்கு முன்னாடி அஞ்சி பேரு ஏமாந்து இருக்காங்க. படம் போட்டாங்க. சினமா திரை வெளிச்சம் அவ முகத்துல பட்டதும் பேய் மாதிரி இருந்தா. அப்பறம் எங்க கை வெக்கிறது. இறுதியா கொண்டு போயி அவ தெரு மொனயில விட்டேன். எனக்கு இழப்பு பத்தாயிரம். கடைசியா ஜெஸ்ஸி ஒன்னு சொன்னா. கார்த்திக் நாம நன்பர்களாவே இருந்துடுவோம். இப்ப இருக்குறா மாதிரி, எங்கே வேனுமுன்னாலும் சுத்தலாம். படம் பார்க்கலாம். காதல் வேணாம் கார்த்திக். எதுக்கு வாரவாரம் பத்தாயிரம் செலவு வைக்கறதுக்கா. இதை காத்தாலேயே சொல்லி இருந்தா எனக்கு பத்தாயிரம் மிச்சம் ஜெஸ்ஸி நு சொல்லிட்டேன். எங்க ரெண்டுபேருக்கும் சண்டை ஆயிடிச்சி. அவ அழுதுகிட்டே போயிட்டா. போகும் போது ஐ ஹேட் யு கார்த்திக் நு சொல்லிட்டு போயிட்டா. கோபத்துல அவ வாங்கின பொருள் திருப்பி தந்துடுவான்னு நினைச்சேன். அப்படி தந்தா திருப்பி குடுத்து பாதி காசு கடையில இருந்து வாங்கிடலாமுன்னு நினைச்சேன். அதனை சண்டைளையும் அந்த பர்சேஸ் பேக் விடவே இல்லை.
நாங்க தெருவுல சண்டை போட்டது அவங்க குடும்பத்துக்கு தெரிஞ்சி அவளுக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணிட்டாங்க. நானும், கல்யாணத்துக்கு போனேன். ஜெஸ்ஸி யை பார்க்க இல்லை. என்னை விட ஒரு கேன இந்த உலகத்துல இருக்கானு தெரிஞ்ச அவனை பார்க்கணுமுன்னு நம்ம அடி மனசு பிராண்டும். அதான் நான் போனேன். கடைசியில அவனை ஜெஸ்ஸி க்கு பிடிக்கலை நு சொல்லிட்டா. இப்பவும் எனக்கு அவனை பார்க்கணுமுன்னு தோணுது. ஜெஸ்ஸி மூஞ்சிக்கே அவனை பிடிக்கலைன்னா அவன் எவ்வளவு கேவலாமா இருப்பான்னு நீங்க யோசிச்சி பாருங்க. ஜெஸ்ஸி என்ன அங்க பார்த்தா. எங்க காதல் மறுபடியும் ஆரம்பிச்சி கொஞ்ச நாள் தொடர்ந்தது.


ஒரு நாள் ராத்திரி ஜெஸ்ஸி போன் செஞ்சி இங்க எதுவும் சரியில்லை, நீ இங்க வா நாம எங்கனாச்சும் போகலாமுன்னு அழுதுகிட்டே சொன்னா. நான் பதறி அடிச்சிகிட்டு போனேன். ரெண்டு பெரும் ஸ்பென்சர் போனோம். ஒரு டேபிள் ல உட்க்கார்ந்தோம். ரொம்ப சோகமா இருந்தா. எப்படி ஆரம்பிக்கலாமுன்னு தெரியாம ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் பார்த்துகிட்டு இருந்தோம். ஆர்டர் கேட்டு ஒரு பையன் வந்தான். என் கிட்டே காசு இல்லாததால ஒரு ஜூஸ் சொன்னேன். ஒன்லி ஜூஸ் வித் டூ கிளாஸ். திடீர்னு ஜெஸ்ஸி எழுந்து அங்கிருந்து வேகமா கிளம்ப ஆரம்பிச்சா. எனக்கு என்ன நடந்ததுன்னே தெரியலை. பின்னாடியே போய் என்னன்னு கேட்டேன். எங்க வீட்டுல சமையல் சரியில்லைன்னு உன்னை கூட்டிகிட்டு ஸ்பென்சர் வந்தா நீ என்னடானா வெறும் ஜூஸ் சொல்லுற. அதான் நான் ஆரம்பத்துலையே சொன்னேனே நம்ம ரெண்டு பேருக்கு செட் ஆகாதுன்னு. சரி வா இப்போ வாங்கி தரேன்னு சொன்னேன் அவ ஒத்துக்கலை. இப்போ நான் அந்த நிலைமைலே இல்லைன்னு சொல்லி போயிட்டா. நான் கூட வீட்டுல சரியில்லை நு சொன்னதும் எதோ பிரச்சினைன்னு நினைச்சேன்.சமையல்தான் பிரச்சினையா. இருந்தும் நான் ஏன் ஜெஸ்ஸி யை காதலிக்கணும்.
அதுக்கு அப்பறம் அவளுக்கு கல்யாணம் ஆயிடிச்சின்னு தெறிஞ்சது. அவன் எதோ பைவ் ஸ்டார் ஹோட்டல் ல முக்கியமான கூக்காம். எப்படியோ கடவுள் என்னை காப்பாத்திட்டாரு. இருந்தாலும் எத்தனையோ பொண்ணுங்க இருதும் நான் ஏன் ஜெஸ்ஸி யை காதலிக்கணும். ( நீங்க அசிங்கமா திட்டுறீங்க எனக்கு கேக்குது)

29 July 2010

சுட்ட செய்திகள்

நேற்று பாகிஸ்தானில் விமான விபத்தில் 150 க்கும் மேற்ப்பட்டோர் மரணம் அடைந்தனர். 

இப்பெல்லாம் விமானத்துல ஏறி வேறு ஒரு இடத்துல இறங்குறது கிட்ட தட்ட நம்ம ஊரு அரசு ஆஸ்பத்திரியில அட்மிட் ஆகி உயிரோட திரும்பி வற்ற அளவுக்கு ஆயிடிச்சி. இடையிலே எப்போ  வேணுமுன்னாலும் நம்ம உயிர் போயிடலாம். எனக்கென்னவோ இப்பெல்லாம் விமானம் கற்று குடுக்குற ஆளுங்க எல்லாம் இதுக்கு முன்னாடி லாரி டிரைவரா இருந்து  இருப்பானுகலோனு தோணுது. சீரியசா சொல்லணுமுன்னா விமாமன் ஓட்டுற ஒவ்வொருத்தரையும் விமானம் ஓட்ட போகும் முன்னாடி மன அழுத்தம் இருக்குதான்னு செக் பண்ணிட்டு அப்புறம் அவங்களை விமானம் ஓட்டசொல்லனும். எதுக்குன்னா, காதல் தோல்வியாகி இருக்கலாம், மனைவியோட கள்ள உறவு தெரிஞ்சி இருக்கலாம், குடும்பத்துல பெரிய சண்டை வந்து இருக்கலாம், எதாச்சும் பெரிய அவமானம் நடந்து இருக்கலாம், அதை யோசிசிகிட்டே அந்த விமானி வண்டி ஒட்டி இடையில எப்பவாச்சும் அவர் தற்கொலை முடிவு செஞ்சி விமானத்தை எங்கயாச்சும் இடிக்கலாம். அதனால அவர் மட்டுமில்லாம அப்பாவி ஜனங்களும் இறந்து போயிடறாங்க. அதான் சொன்னேன் மன அழுத டெஸ்ட் செஞ்சி விமானம் ஓட்ட வைக்கணும். ( எவ்வளவு பெரிய பணக்காரன் ஆனாலும் விமானத்துல ஏற கூடாது. இங்கிருந்து காஷ்மீர் போனாலும் சைக்கிள் லேயே போயிடனும்.)


விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்க  மறுத்தால் எதிர் கட்சியினர் இன்று சட்ட மன்றத்திற்கு வெளியில் அமர்ந்து எதிப்பை காட்டுகின்றனர்.

எதிர் கட்சி மட்டும் இல்லாம, ஆளும் கட்சி மந்திரிகளும் வெளியில உட்க்கார்ந்து உங்க குப்ப  சண்டையை போட்டு கிட்டீங்கனா, சட்ட மன்றத்துக்கு உள்ள மொத்த மின்சாரம் மிச்சம். ஒவ்வொரு நாளும் சட்ட மன்றம் கூடும் போது சில கொடிகள் அரசுக்கு இழப்பு. உங்களால எதுவும் மக்களுக்கு உபயோகம் இல்லை. வெளியில உட்க்கார்ந்து மின்சாரம் ஆச்சும் மக்களுக்கு மிச்ச படுத்துங்க.


தொடர்ந்து முரளிதரன் பந்து வீசும் முறையை  விமர்சித்து வரும் பிஷேன் சிங் பேடிக்கு பதில் சொல்லி இருக்கிறார் முரளிதரன். பிஷன் சிங் பேடி ஒரு சாதாரண பௌலர் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

பந்து வீசி நிறைய விக்கெட் எடுத்து பேரு வாங்குறவங்க  முதல் ரகம் .  ஆனா அப்படிபட்டவங்களை விமர்சித்தே பேரு வாங்குறவங்க ரெண்டாவது ரகம். பிஷன் சிங்க் பேடி ரெண்டாவது ரகம் அப்படின்னு சத்தியமா நான் சொல்ல மாட்டேன். எனக்கு எதுக்கு தேவையில்லாத வம்பு.


டெல்லி விமான நிலையத்தில் ராடார் வேலை செய்யாததால் சிறிது விமானங்கள் புறப்படுவதில், இறங்குவதில் தாமதமானது.

விமானம் ஒட்டுரவனாலதான் பிரச்சினைன்னு நினைச்சா இது வேறயாடா. உலகத்துல இருக்குற மொத்த ஜனத்தொகையை குரைக்கிற  முக்கியமான வேலையை மொத்தமா விமானம் ஓட்டுறவங்க அப்புறம் அதுக்கு சம்பந்தபட்டவங்க  குத்தகைக்கு எடுத்துகிட்டா போல இருக்கு . ( நடத்துங்கடா, நடத்துங்க )

27 July 2010

ராமர் பாலம் அடிப்படை கேள்வி

சில வருடங்களுக்கு முன் மிகவும் பரபரப்பு ஏற்ப்படுத்திய ஒரு பிரச்சினை ராமர் பாலம் . சேது சமுத்திர திட்டத்தை தொடர விடாமல் செய்த பிரச்சினை. பிரச்சினைக்கு காரணம் அங்கே ராமர் பாலம் இருந்ததாக நம்பப்படுவது. வடநாட்டு சாதுக்கள், சாமியார்கள், சாதுக்களால் பதவியை பிடித்த அரசியல் கட்சிகள் அங்கே ராமர், பாலம் கட்டிய இடம் என்றும் அங்கே எந்த தூர்வாரளும் நடக்ககூடாது என்றும் சேது சமுத்திர திட்டத்தை செய்ய விடாமல் தடுத்தனர். பிறகு அந்த பிரச்சினை நீதிமன்றத்துக்கு சென்று இறுதியில் அங்கே எந்த பாலமும் இல்லையென்றும் சேது சமுத்திர திட்டத்தை தொடரலாம் என்று நீதிபதிகள் அறிவித்தும் அந்த சாதுக்கள், சில அரசியல் கட்சிகள் அதை ஏற்காமல் பெரும் பிரச்சினை செய்தது அனைவருக்கும் தெரியும். ராமர் கட்டியதாக சொல்லப்படும் அந்த பாலம் ஒரு வேலை உன்மை என்று வைத்துக்கொள்வோம். அப்படி உன்மையாகவே ராமர் பாலம் கட்டியிருந்தால் வியாசர் சொன்ன ராமாயணப்படி ஒரு அடிப்படை ( லாஜிக் ) கேள்வி ஒன்று எழுகிறது. இங்கே நான் சொல்லப்போகும் அந்த அடிப்படை ( லாஜிக் ) கேள்வி தான் இந்த பதிவு. அந்த அடிப்படை கேள்விக்கு போவதற்கு முன் ராமர் எதற்காக, யாரை எல்லாம் வைத்து ராமர் பாலம் கட்டினார் என்று பார்ப்போம்.

வியாசர் சொன்ன கதைப்படி ராவனாசுரன் , சீதையை கடத்திக்கொண்டு இலங்கைக்கு செல்கிறான். ராமர் சீதையை விடுவிக்க வடக்கில் இருந்து தெற்கு நோக்கி வருகிறார். இங்கே நம் முன்னோர்களெல்லாம் குரங்கு மனிதர்களாக இருக்கிறோம். இதை நான் சொல்ல வில்லை, ராமாயணத்தில் அப்படிதான் சொல்லப்பட்டிருக்கிறது. இங்கே வந்து அனுமார் உதவியுடன் பெரும் படை திரட்டுகிறார் ராமர். இறுதியாக இங்கிருந்து இலங்கைக்கு செல்ல பாலம் அமைக்க முடிவு செய்கிறார்.


பாலம் கட்டுவதற்கு முன்னாள் அந்த பெரும் படையில் ஒருவரை பற்றி இங்கே சொல்லவேண்டும். அவரும் ஒரு குரங்கு மனிதன். அவர் சிறு வயதில் வீட்டில் இருக்கும் அணைத்து பொருள்களையும் கொண்டு சென்று கடலில் போட்டுவிடுவான். இதனால் அவர் தந்தை அவனுக்கு ஒரு சாபம் தருகிறார். அது என்னவென்றால் அவன் இனி எதை நீரில் போட்டாலும் அது மூல்கக்கூடது என்பது. அதாவது அவன் எதை கடலில் போட்டாலும் அது மிதக்கவேண்டும். மூல்கக்கூடாது. இவரைத்தான் ராமர், பாலம் கட்டுவதற்கு உபயோகபடுத்துகிறார். அதாவது முதல் கல்லை தண்ணீரில் போடுவார். அது மிதக்கும். பின் அதில் ஏறிக்கொள்வார், அடுத்த கல்லை போடுவார் அதுவும் மிதக்கும். இப்போது அவர் இரண்டாவது கல்லின் மேல் ஏறிக்கொள்வார். பின்னால் வருபவர் முதல் கல்லில் ஏறிக்கொள்வார்கள். அதன் பிறகு மூன்றாவது கல்லை போட்டு இவர் அதில் ஏறிக்கொள்வார். இப்படியாக இலங்கைக்கு சென்றதாக கதை. இது எங்களுக்கு தெரியுமே நீ என்ன சொல்ல வந்தாய் அதை சொல்லிதொலை என்கிறீர்களா. பொறுமை கோபப்படாதீர்கள்.

ராமர் பாலம் கடலுக்கு அடியில் உள்ளது என்றும், அதனால் சேது சமுத்திர திட்டத்தை கைவிடவேண்டும் என்றும் சாதுக்கள், சாமியார்கள், சில அரசியல் கட்சிகள் பிரச்சினை செய்தது. இன்னும் ஒரு படி மேலே சென்று நாசா எடுத்த புகைப்படத்தில் ராமர் பாலம் தெரிந்ததேன்றும் சொன்னார்கள்.
இப்போது அந்த அடிப்படை (லாஜிக் ) கேள்வி. ராமர் உண்மையாக பாலம் கட்டியிருந்தால் அந்த பாலம் இப்போதும் கடலுக்கு மேல் இருந்து இருக்கவேண்டும் . ஏன் என்றால் , பாலம் கட்ட ஒவ்வொரு கல்லையும் போட்டவருக்கு அதுதானே சாபம். அவர் எந்த பொருளை போட்டாலும் அது கண்டிப்பாக மிதக்கவேண்டும். எக்காரணம் கொண்டும் மூல்கக்கூடாது. இதுதான் நான் சொன்ன அந்த அடிப்படை ( லாஜிக் ) கேள்வி. இதற்க்கு உங்களுக்கு விடை தெரிந்து இருந்தால் பகிர்ந்து கொள்ளவும்.

இல்லை, பாலம் உள்ளே சென்றதற்கு வியாசருக்கு தெரியாத வேறு ஒரு காரணம் இருக்கிறது என்று சொல்லும் சாமியார்களும், சாதுக்களும் அந்த கதையை அவிழ்த்துவிடவும்.