11 January 2011

ஆடாத ஆட்டமெல்லாம்.....

வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே.



சாரு பீர் அடிக்க போகிறார். அங்கே யாரோ ஒருவர் முக்காடு போட்டுக்கொண்டு குடித்துக்கொண்டு இருக்கிறார். எங்கேயோ பார்த்த ஞாபகம் . உங்கள எங்கயோ பார்த்து இருக்கிறேனே என்று அவரை திருப்பியதும் அதிர்ச்சி. அதுவரை குடித்த பீரின் போதை இறங்கி விட்டது. அது நம் நித்தியானந்தமே தான். பிறகென்ன அவர்கள் சம்பாசனை கீழே வருமாறு.


சாரு - உன்னை நம்பினவங்க குடிய கெடுத்து இங்க வந்து கமுக்கமா குடிக்கிறியா..


நித்யானந்தம் - பக்தா கொஞ்சம் மரியாதையாய் பேசவும்.


சாரு - பொறம்போக்கு, பரதேசி நாயே.

நித்ய - மரியாதை வேண்டாம். நீ எப்போதும் பேசுவது போலவே பேசவும். ஏன் என்மேல் உனக்கு இவ்வளவு கோவம். அப்படி நான் என்ன தவறு செய்தேன்.


சாரு - நீ ஒண்ணுமே செய்யலையா....அப்பறம் எதுக்கு ஜெயிலுக்கு போனே.

நித்ய - நான் என்ன செய்தேன். சாதாரண மக்களுக்கு புரியவில்லை. உனக்குமா புரியவில்லை. அது ஒரு தியான முறை அதை ( தந்த்றிக்) என்று சொல்வார்கள். அதைதான் அந்த பெண்ணிற்கு சொல்லிக்கொடுத்தேன். அனால் அதை மக்கள் தவறாய் புரிந்து கொண்டார்கள். ஜெயிலில் போட்டார்கள். மூடர்கள்.

சாரு - நீ முழுசா போத்திகிட்டு முகத்தை மட்டும் காட்டினாலே, மூணு நாளு சோறு சாப்பிட முடியாது. அம்மணமா வேற உன்னை பார்க்க வெச்சிட்டியே. எல்லா மேட்டரும் பண்ணிட்டு தியானமுன்னா சொல்றே.



நித்ய -சரி விடு. இதனால் நீ ஏன் என் மேல் கோபமாய் இருக்கிறாய்.


சாரு- நீ எல்லாம் பண்ணிட்டே. ஜனங்க என்னயுமில்லடா சந்தேக படறாங்க. நான் என்னமோ நீ மேட்டர் பண்ணும் போது பக்கத்தில இருந்து இப்படி செய், அப்படி செய், படுக்க வை நு சொன்னா மாதிரி எல்லாரும் எழுதிட்டாங்க தெரியுமா. அப்படி எதனா பிகரு எனக்கு செட் பண்ணி குடித்து இருந்தாலும் நான் வருத்த பட்டு இருந்து இருக்க மாட்டேன். நான் தான் ஒண்ணுமே பண்ணலியேடா.


நித்ய - அது உன் தவறு சிஷ்யா. என் ஆஷ்ரமத்தில் எத்தனை பிகரு இருக்கிறார்கள். வேலூர்ல இருந்து வெள்ளக்காரி பிகர் வரை என்னோட சிஷ்யைகள். உன் எழுத்து படித்து உன்னை ஆஷ்ரமத்தில் விட்டாலே பல பிகருகளை நீ பிக் அப் பண்ணிக்கொல்வாய் என்று நம்பினேன். நீ இப்படி உன் வாய்ப்புகளை வீனடித்துக்கொல்வாய் என்று நான் நினைக்கவில்லை. என்னை பார் தினம் ஒரு பிகர்.


சாரு - இன்னொரு வாடி சிஷ்யன்னு சொன்னே செருப்ப கலட்டி மகனே பிய்ய, பிய்ய அடிப்பேன்.


நித்ய - சரி சொல்லமாட்டேன். இதைதான் கிருஷ்ணர் பகவத்கீதையில் " எங்கேயும் எப்போதும் சந்தோசம், சங்கீதம். ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்" நு சொல்லி இருக்கிறார். புரியுதா...


சாரு - நல்லா புரியுதுடா... உன்னோட போட்டோ வை என்னோட தளத்துல போட்டது மகா தப்புன்னு நல்லா புரியுது. ஜனங்க என்ன திட்டினது தப்பே இல்லன்னு புரியுது. சரி எப்போ ஜெயில் ல இருந்து வந்தே.


நித்ய- பக்தா முற்றும் திறந்தவனுக்கு ஜெயில் என்னே வீடு என்னே, பார் என்னே எல்லாம் ஒன்று தான்.


சாரு - நீ முற்றும் திறந்து காட்டினது இந்தியாவுல இருக்குற எல்லோரம் பார்துட்டான்களே. இன்னொரு வாடி யோகி மாறி பேசினே.....புல் மப்புல இருக்கேன் வாத்தா, ஒம்மாலா நு பேசிடுவேன் ஜாக்கிரதை.

நித்ய - சரி, சரி, என்னை எப்பவோ விட்டுட்டாகளே.


சாரு - உன்னை எப்படி அவ்வளவு சீக்கிரம் விட்டுட்டாங்க. இந்த போலீஸ் காசு வாங்கி உன்ன மாதிரி ஆளுகளே வெளியில விட்டுட றாங்க. வெளியில வந்து உங்க சித்து வேலை காட்டறீங்க.



நித்ய - அது வேறு ஒன்றும் இல்லை . அங்கே ஜெயிலரய்யவுக்கு அந்த நடிகைக்கு கடு குடுத்தாற்போல் யோகா (தந்த்றிக்) முறை சொல்லி குடுத்தேன். அடுத்த நாள் எனக்கு விடுதலை.


சாரு - சரி உன்னோட எளவு வாழ்க்கை வரலாறு எழுதினேன். அதுக்கு இன்னும் காசு தரலை .எப்ப தருவே.


நித்ய - இந்த உலகத்துலே எதுவுமே நிரந்தரமே இல்லை. பகவத்கீதைல ஒரு வரி வருது. " ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ளே போன கதை உனக்கு தெரியுமா" நு. அதுதான். பணம் எல்லாம் நிலை இல்லாதது. பணத்தின் மேல் ஆசை திற பக்தா.



சாரு - அப்படியா அப்பன நீ மண்ணுல போறதுக்கு தயார இரு என்று சாரு பீர் பாட்டில் உடைத்து அவன் கழுத்தில் வைக்கிறார்.

நித்ய - அவசரப்படாதே....எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துக்கொள்வோம்.


சாரு- பல நாள் தூங்காம, கண்ணு வலிக்க எழுதினது எல்லாம் அவ்வளவு தானா. தண்ணியில போட்ட கோலம் தானா.


நித்ய- எங்கள் போன்றவர்கள் முகத்தை பார்த்தவுடன் உனக்கு புரிய வேண்டாமா. என்னை போன்ற சாமியார்களிடம் நீ காசு எதிர்பார்க்கலாமா. எத்தனை அறியாமையில் வாழ்ந்திருக்கிறாய் பக்தா. எங்களிடம் காசு வாங்குவது என்பது "உப்பு தண்ணியில் சக்கரை எடுப்பது " போன்றது. உன்னை பார்த்தாலும் பாவமாய் இருக்கிறது. அதற்க்கு பதில் வேறொன்று உனக்கு காட்டுகிறேன். இந்த வீடியோ பார். இது புதுசு. பிகர் எப்படி என்று சொல் .


இருவரும் டேபிள் அடியில் சென்று அந்த வீடியோ வை பார்க்க ஆரம்பிக்கிறார்கள்.

எதோ பரவா இல்லை என்று நினைத்தால் ஓட்டு போடவும்...

 
 
 

31 December 2010

ஒரு கை சோர் ஆயின் ஊருக்கு கொடுப்போம்.

நான், என், என்ற எண்ணத்தை எடுப்போம்,
ஒரு கை சோர் ஆயின்  ஊருக்கு கொடுப்போம்.
மனிதனை  தீண்டா மதம் யாவும் வெறுப்போம்,
இறைவன் செய்யும் தீவிரவாதம் ஒழிப்போம்.
நிறபேதம் செய்பவரை  பிடிப்போம்,
அன்பினால் அனைவரையும் அனைப்போம்.
வறுமை, ஏழை, பட்டினி என்பது,
இறந்த காலமென படிப்போம்.
உலகில் பிறந்தது வாழ்வை ரசிக்க,
எதற்கு யுத்தம்  செய்து இறக்க.
பிறரிடம் நீ அன்பு கோர்,
பிறருக்கு நீ அன்பு செய்,
வாழும் அத்தனை நாளும்
அணுவணுவாய்  இன்பம் செய்.

இப்புத்தாண்டு முதல்.

28 December 2010

குட்டிக் கவிதைகள்

காமம்

காமம், இச்சை தீற காதல் வேஷம் தறிக்கும்.
உலகில் காதல் தனிச் சொல் அல்ல.
அது அரிதாரம் பூசிக்கொண்ட வக்கிரச் சொல்.
கருத்த, இளைத்த, ஆணிடம் பெண்,
பெண்ணிடம்  ஆண்,
முதல் காதல்க் கொள்ளாததே சாட்சி.

************************************
மனிதன்

புலி ஊருக்குள் புகுந்தது என்றார்,
யானைகள் வீதிகளில் வருது என்றார்,
பாம்பு வீட்டுக்குள் நுழைந்தது என்றார்,
கானகம் அழித்து அங்கே
ஊரை உருவாக்கிக்கொண்ட மனிதர்கள் .

************************************* 

அவள் மனம்


அவள் கூந்தல் வழி வீழ்ந்த பூ ஒன்று
என் ரகசிய பொருள் ஆனது.
அது நொடிக்கொரு வாசம் வீசுகிறது.
மல்லிகை வாசம்,
அடுத்த நொடி ரோஜா,
...பின்னொருமுறை செம்பருத்தி.
விந்தை என்னவெனில்
அது நிகழ்ந்துக் கொண்டே இருக்கிறது
ஐந்தாண்டுகள் ஆகியும்.

27 December 2010

நாட்டை அளிப்போம்...கட்சி வளர்ப்போம்....

மன்மோகன் சிங்க் - மேடம் நாம எதுக்கு ஜே பி சி கமிட்டி வைக்க கூடாது. மக்கள் நம்மள ரொம்ப கேவலமா திட்டுறாங்களே. சின்ன குழந்தைல இருந்து பெருசு வரைக்கும் எல்லாருமே நம்மள ஊழல் கட்சின்னு பேசறாங்க. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என்னால சுத்தமா வெளியில போக முடியலை. எல்லாரும் நான் தான் பிளான் போட்டு பண்ணினதா பேசிக்கறாங்க. நான் என்ன செய்யட்டும்.



சோனியா - அர்ஜுனா, சாரி மன்மோகன் ஒரு விஷயம் நன்றாக நினைவில் வை. இங்கே நம் நாட்டில் நம் கட்சி தலைமையில் நடக்கும் எந்த ஊழலுக்கும் நீ காரண கர்த்தா அல்ல. நீ வெறும் அம்பு தான். எய்தவன் நான் தான். நீ வெறுமனே கருவி. நான் தான் அதன் கர்த்தா. நீ உன் கடமை மட்டும் செய். நான் எழுதி குடுக்கும் காகிதத்தில் என்ன இருக்கிறதோ அதை மட்டும் சென்று மீடியா முன் படி. அது போதும். நியாயம், அநியாயம் என்று நீ சிந்திக்காதே. 2001 பி ஜே பி ஆட்சியில் ஒரு லட்சத்தி ஐம்பது ஆயிரம் கோடி அரசுக்கு நட்டம் என்று ஒரு அறிக்கை படித்தேன். இது ஒன்றும் தவறு இல்லை. அவர்கள் கட்சி காப்பாற்றுவதற்கு அடித்தார்கள். கொண்டு பொய் சுவிஸ் வங்கியில் போடவில்லையா. அது போல தான், நாம் அடித்த தொகையும். எல்லாம் நம் கட்சியை இன்னும் ஐம்பது வருடங்கள் காப்பாற்றுவதற்கு தான் புரிந்ததா. எதோ நம் புண்ணியம் தி.மு.க கட்சி நம் கூட்டாளியாகவும் ஏ. ராசா டெலிகாம் மந்திரியாகவும் இருந்ததால் நமக்கு பல ஆயிரம் கோடி வந்து சேர்ந்தது. எதோ நான் போன ஜென்மத்தில் செய்த புண்ணியம். அதை அனுபவிப்பாயா அதை விட்டு விட்டு ஏதேதோ சிந்தித்துக் கொண்டு இருக்கிறாய். மக்கள் என்கிறாயா அவர்களை கணக்கில் கொள்ளாதே. அவர்களுக்கு ஆயிரம் பிரச்சினை, இந்த ஊழலை அதிகம் சொன்னால் ஒரு வாரம் பேசுவார்கள் பிறகு அவரவர் வீட்டு பிரச்சினை வந்துவிடும். நம்மை மறந்து விடுவார்கள் . மீடியா என்கிறாயா அவர்கள் நம் செல்ல பிள்ளைகள், ஒரு பெட்டி குடுத்தால் அவர்களே நம்மை பாராட்டி இரண்டு நாள் தொடர்ந்து நம்மை புகழ்ந்து தள்ளுவார்கள். ஆகையால் நீ அவர்களை பற்றியும் பயப்பட தேவை இல்லை. ஊளை செய்வது என்பது அனைத்துக் கட்சி தர்மம். அதை எந்த கட்சியும் ஆட்சேபிக்காது. எதற்க்காக மாட்டுகிறோம் என்றால் எதிர் கட்சிக்கு குடுக்க வேண்டிய பங்கை குடுக்காமல் போனபோது. ஆகையால் அதையும் நானே பார்த்துக்கொள்கிறேன். நீ உன் தர்மத்தை செய். நீ வெறுமனே பொம்மை.நான் தான் உன்னை ஆட்டி வைக்கும் கர்த்தா. உன் பங்கு இந்நேரம் சுவிஸ் வங்கியில் விழுந்து இருக்கும். சந்தோசமாக குடும்பத்துடன் என்ஜாய் செய்துக்கொள். மடையர்களான மக்களை நினைக்காதே. எனக்கும் நினைவு படுத்தாதே. வெளியில் மீடியா ஆட்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த காகிதத்தில் இருப்பதை படித்து அதை அப்படியே ஒப்பித்துவிடு. சரியா...



மன்மோகன் - சரி கிருஷ்ணா.....மன்னிக்கவும் மேடம்....