30 July 2009

வேட்டையாடு விளையாடு ( லொள்ளு )

அக்கா அசிஸ்டன்ட் கமிஷனர் ராகவன் வந்திருக்காரு க்கா. சீக்கிரம் அண்ணனை கூப்பிடுங்க. ராயபுரம் மணி மாடியில் இருந்து இறங்கி வருகிறான்.

ராயபுரம் மணி - என்ன வேணும் சார்

ராகவன் - காத்தால உன்ன பார்க்கணும் என்கிற அவசரத்துல எதுவும் சாப்புடாம வந்துட்டேன். நாலு இட்லி, ஒரு வடை, கொஞ்சம் கெட்டி சட்னி சொல்லு.

மணி - புரியலை சார்

என்ன - நீதான கேட்டே என்ன வேணுமுன்னு.

மணி - விளையாடாதீங்க சார் .

ராகவன் - நீ என்ன சானியா மிர்சா வா இல்லை மல்லிகா செராவத்தா உன்கூட விளையாட.

மணி - மல்லிகா செராவத், சினமா நடிக்கறவங்க சார்.

ராகவன் - விடுயா, தெரியாம சொல்லிட்டேன், கண்டுக்காத.

மணி - சார் , எதுக்கு இங்க வந்திருக்கீங்கன்னு கேக்கறேன் சார்.

ராகவன் - என்னோட கண்ணை கேட்டியாமே .

மணி - இல்லையே சார்.

ராகவன் - ஆ... இந்த ராகவன் தொல்ல தாங்க முடியாலை, எப்ப பார்த்தாலும் நம்மளையே தொல்ல பண்றான். காசிற சாரயதுல பாதி இவனே கேட்டு குடிச்சிடறான். அவனால பெரிய பிரச்சினையா இருக்கு. அவன் கண்ணை கொண்டாரவங்களுக்கு, ரெண்டு லட்சம் தரேன்னு நீ சொன்னதா ஒரு பரதேசி நாயி சொல்லிச்சி. இப்ப என்ன நீ ராயபுரம் மணி இல்லேன்னு சொல்ல போறியா.

மணி - உண்மையாலுமே சார், நான் ராயபுரம் மணி இல்ல சார். இங்கிருந்து நாலு வீடு தள்ளி போயி கேளுங்க. அவரு வீடு அங்க தான் இருக்கு.

ராகவன் - அப்படியா சாரி சார், தெரியாம நிறைய பேசிட்டேன். நான் போயிட்டு வரேன் சார்.

சிறிது நேரம் கழித்து மறுபடியும் அதேபோல் கதவை ஒரு உதை உதைத்து அதே இடத்துக்கு வருகிறார் ராகவன்.

ராகவன் - ஏன்டா நாய். அங்க கெட்ட நீ தான் மணி நு சொல்றாங்க. எதுக்குடா பொய் சொன்னே. மறுபடியும் கதவை எட்டி உதைச்சதுல என்னோட கட்ட விரல்ல அடி பட்டுடிச்சி.

மணி - எதுக்கு சார் அதை எட்டி உதைச்சே. லேசா கையாள தள்ளினாலே திறக்குமே.

ராகவன் - இந்த இடத்துல நான் அப்படி தான் கதவை உதைக்கணும். சரி நீ எதுக்கு இப்படி பண்ணினே.

மணி - நீ என்ன எப்படி ஆரம்பத்துல கலாய்ச்சே, அதுக்காக உன்னை ஒரே ஒரு வாடி நான் கலாய்ச்சி பார்த்தேன்.

ராகவன்- சரி டயலாக் கு வருவோம். எதுக்கு காசு எல்லோருக்கும் குடுத்துகுட்டு நானே வந்துட்டேன். என் கண்ணை எடுத்துக்கோ என்று சற்றென்று குனிந்து தன்னுடைய ஷூவில் ஏதோ தேடுகிறார் ராகவன் .

மணி - என்ன சார் தேடறீங்க.

ராகவன் - வற்ற அவசரத்துல கத்திய ஷூவுல வைக்க மறந்துட்டேன்.

மணி - கொஞ்சம் இருங்க . இந்தாமே அந்த ஆப்பிள் வெட்டுற சின்ன கத்தி குடு. என்று அதை வாங்கி ராகவனிடம் தருகிறார்.

பிறகு ராகவன் கத்தியை வாங்கிக்கொண்டு,அதை மறுபடியும் மணியிடம் குடுத்து தன கண்ணை எடுக்க சொல்கிறான். அனால் மணி பயந்து அதை செய்ய மறுக்கிறான். பிறகு

ராகவன் - அது . பசங்களா நீங்க எல்லாம் வேற வேலை பார்த்துக்கோங்கப்பா. மணி நீ நாளைக்கி காத்தால பத்துமணிக்கு ஆபீஸ் வந்திடு. ரொம்ப சீக்கிரம் வந்துடாதே. நா இருக்க மாட்டேன்.

மணி - எதாச்சும் வெளியூர் போறீங்களா சார்.

ராகவன் -பொண்டாட்டியை இட்டுனு ஊட்டிக்கு போறேன், நீயும் வரியா.

மணி- சரி சார், உங்க மனைவி தப்பா நினைக்க மாட்டாங்களா சார்.

ராகவன் - அடி செருப்பால நாயே, மரியாதையா சொன்ன மாதிரி நாளைக்கி வாடா.

மணி- ராகவன், எனக்கு சாராயம் காச்சறது தவிர வேற எதுவும் தெரியாது. ஆனா நீ அதுக்கும் இடைஞ்சல் பண்ணிக்கிட்டு இருக்கே. உன்னை போடறதை தவிர எனக்கு வேற வழி தெரியலை. டேய் கதவை சாத்துங்கடா. என்று கோபமாக கத்தினான்

ராகவன் - என்னடா அசிங்கமா பேசிட்டே. நான் என்ன உன் பொண்டாட்டியா நினைச்ச பொழுதெல்லாம் போடறதுக்கு. அப்புறம் உனக்கு வேற தொழில் தெரியாதா. நாயே ஆரம்பத்துல பிட் பாக்கெட் அடிச்சிகிட்டு இருந்தே, அப்புறம் கொஞ்ச பொண்ணுகள வெச்சி விபசாரம் பண்ணிக்கிட்டு இருந்தே,

மணி - பொண்ணுங்கள வெச்சி தான் சார் விபசாரம் பண்ண முடியும்,,,,

ராகவன் - என்ன நக்கலா.... இப்ப இன்னாடான வேற தொழில் தெரியாதுன்னு சொல்றே.

மணி - ராகவன், நான் ரொம்ப ஆழமா இறங்கிட்டேன்.

ராகவன் - இறங்கினா ஏறி வாடா .

மணி - இப்ப நான் என்ன பண்ணனும்.

ராகவன் - மரியாதையா , நீ காச்சுற சாராயத்துல முதல் கேன் எனக்கு வரணும். இந்த டீல் சரினா நான் இங்கிருந்து போயிடுவேன்.

மணி - சரி சார்.

ராகவன் - அப்புறம் ரெண்டாவதா வரும்போது வேகமா கதவை உதைச்சதுல கட்ட விரலு அடிபட்டுடிச்சின்னு சொன்னேனில்ல அதுக்கு கட்டு போடணும். ஒரு முப்பது ரூபா இருந்தா ராயப்பேட்டை ஆஸ்பித்திரி போவேன்.....

மணி - ??????????

பாரம்பரிய திறமை

பொதுவாகவே பாரம்பரியமாக சில திறமைகள் வருவதுண்டு. இது ஜீன்ஸ் வழியாக வரும் என்பார்களே அது. உதாரணத்திற்கு ஒருவர் இசையில் பெரிய அறிவாளி என்று வைத்துக்கொள்வோம். அவர் மகனுக்கு இயற்கையாகவே அந்த அறிவு வர வாய்ப்பு இருக்கு. கண்டிப்பாக வரும் என்று இல்லை , ஆனால் அதிக வாய்ப்பு இருக்கு. ஒரு வேலை தன் மகனுக்கு அந்த திறமை இல்லை என்றாலும், தன் பேரனுக்கு அந்த திறமை வர வாய்ப்பு இருக்கு.

இப்போது எதற்கு இந்த மொக்கை என்கிறீர்களா, அதுபோலவே இங்கே ஒரு தந்தை தன் மகனின் திறமையை மிக சிறிய வயதிலேயே கண்டறிந்து அதை உலகம் போற்றும் வகையில் செய்திருக்கிறார். என்ன அந்த சாதனை. பாருங்கள்.

ஞான பழம்

இங்கே நீங்க பார்க்கபோகுற வீடியோ ஆப்பிரிக்கா பற்றின ஒரு டாகுமெண்டரி படம் . இங்கு காடுகளில் வெயில் காலங்களில் கடும் வெயில் அடிக்கும் என்று பெரும் பாலானவர்களுக்கு தெரியும். இந்த காட்டு பகுதியில் சில குறிப்பிட்ட பழங்கள் தண்ணீர் அதிகம் உள்ள பழங்கள் உள்ளன. அதனால் அனைத்து மிருகங்களும் இங்கு வந்து அதை உட்க்கொள்கின்றன. அந்த பழத்தில் ஒரு பிரத்தியேகம் இருக்கின்றது. அது என்ன என்று நீங்கள் பாருங்கள்.


27 July 2009

நூதன பரிசோதனை

கீழே வரப்போகுற வீடியோ உண்மையில் நடந்த சம்பவம். எங்கே என்று கேட்க்காதீர்கள் அது சஸ்பென்ஸ். ஒரு அலுவலகத்தில் பெண்கள் பாத்ரூமில் ஆண்கள் பொம்மைகளை வைத்து விட்டனர். அதே போல் ஆண்கள் பாத்ரூமில் பெண்கள் பொம்மைகளை வைத்து விட்டார்கள். அவர்கள் ஆகி கழுவியதும் துடைப்பதற்கு துண்டு இல்லை. வேணுமென்றே வைக்கவில்லை. ஒரு பரிசோதனை செய்தனர். பெண்கள் எப்படி எங்கே தங்கள் கைகளைய் துடைத்துக்கொள்கிறார்கள் என்று, அதேபோல் ஆண்கள் எங்கே தங்கள் கைகளை துடைத்துக்கொள்கிறார்கள் என்று பார்த்தனர். அவர்கள் நினைத்து போன்றே சரியான இடத்தில் தான் இரு பாலரும் கைகளை துடைத்து கொண்டனர்.

எங்கே துடித்தார்கள் என்று நீங்களும் பாருங்கள்.

கொடுமைக்கார மனைவி ஒழிக

மனைவிங்கலால கொடுமை அனுபவிக்கிற எல்லா ஆண்களுக்கும் இந்த வீடியோ சமர்ப்பணம். எத்தன சித்திரவதை பட்டு இருந்தா, இது போல ஒரு ஐடியா செய்து தன்னோட பொண்டாட்டி தொல்லையை ஒளிச்சி இருக்கார் இந்த புரட்சிக்காறார். ஒரு அற்ப்புதமான பூகம்பம் ஐடியா இது.


நீங்க பாருங்க உங்களுக்கு இது கண்டிப்பா சிரிப்பு வரவைக்கும்.

25 July 2009

பென்கள் மிரண்டால்

பொதுவாகவே நம் ஊரில் ஒரு கருத்து உண்டு. பென்களை விட ஆண்கள் உசத்தி என்று. இது எப்படி வந்து இருக்கும் என்று யோசிக்கும் போது இப்படி எனக்க்கு தோன்றிற்று. கணவன் மனைவி இடையில் ஒரு கருத்து வேருபாடி என்று வைத்துகொள்வோம். இருவரும் வாதிக்கிறார்கள், ஒரு கட்டத்தில் கணவனால் பேசமுடியாமல் மனைவியை அடிக்கிறான். அவளால் அவனை திருப்பி அடிக்க இயலவில்லை. காரணம் கணவன் என்றாலும் அவளுக்கு உடல் வலிமை இல்லாதது ஒரு காரணம். ஒரு வேலை அவள் அவனை விட பலம் வாய்ந்தவளாக இருந்தால் எப்படி இருக்கும்.


இப்படித்தான் இருக்கும்.




ஆகையால் நண்பர்களே உங்களை விட பலம் குறைந்த பென்களாக பார்த்து திருமணம் செய்து கொள்ளுங்கள்.

24 July 2009

கண்கள் இரண்டால்













*

*

*

*

*

*

*

*

*

*

*

மேலிருக்கும் படத்தை பார்த்தும் உங்களுக்கு முதலில் என்ன தெரிந்தது.
உங்களுக்கு என்ன தெரிந்திருந்தாலும் அங்கு இருப்பது வெறும் மின் விளக்கு.

ஒரு வேலை உங்களுக்கு மின் விளக்கு தெரியாமல் வேறு எதாச்சும் எசகு பிசகாக தெரிந்திருந்தால் தயவு செய்து ஒரு ஒட்டு பிறகு ஒரு பின்னூட்டம் போடவும்.



பூனைக்கி பலியான சுண்டெலி

கணவன் தன் மனைவியை உற்ச்சாக படுத்த, வெள்ளைக்காரர்கள் எப்போதும் செய்யும் ஒரு காரியத்தை செய்தான். இவன் கொஞ்சம் வித்தியாசமாக செய்தான். அதன் விளைவு. கீழ் வரும் படத்தில்.



23 July 2009

சும்மா விளையாட்டுக்கு














ஹீரோ - நான் என்ன சொல்லிட்டேனு இப்படி சிரிக்கறீங்க.

ப்ரியாமணி - அசின் கூட நடிக்க ஆசை னு சொன்னா சிரிக்காம என்ன பண்ணுவாங்களாம். எவ்வள பெரிய சிரிப்பு இது. நான் உன் கூட நடிக்க ஒத்துக்குட்டதே பெரிய விஷயம்.

ஹீரோ - ?????
















யோவ், பார்த்து சத்தம் போடுப்பா. உன்னோட அடி வயத்துல இருந்து ஆயி வாசனையே வெளியில வருது. காப்பு தாங்களை.


















ஒபாமா- இந்த டிரஸ் டிசைன் நல்ல இருக்கு இல்லை .

நண்பர் - நீ டிரஸ் டிசைன் பார்க்கரிய இல்லனா , வேற எதாச்சும் பார்க்கறியா.

ஒபாமா- பத்திரிகை இதை படம் பிடிக்காம பார்த்துக்கோ. கொஞ்ச நேரம் பார்த்துக்கறேன்.

நண்பர்- நானும் கொஞ்சம்.......

ஒபாமா - நேத்து சொன்ன டாகுமென்ட் ரெடி பண்ணிட்டியா. மரியாதையா அதை ரெடி பண்ணுற வேலைய பாருயா.
















மல்லிகா - யாராச்சும் முத்தம் வாயில குடுப்பாங்க, இல்லன்ன கன்னத்துல குடுப்பாங்க, நீ என்னையா காதுல குடுக்கறே. உங்க ஊர் புத்திய காட்டிட்டியே. வாயில முத்தம் தருவே , எதாச்சும் விளம்பரம் வருமுன்னு நினச்சேன். பொளப்புல மண்ணள்ளி போட்டுட்டியே.














கெளதம் - சிம்பு என்கிட்டே பேசும் போது எதுக்கு அடிக்கடி பின்னாடி பார்க்கறே. அந்த பொண்ணுக்கு நூல் விடறியா.

சிம்பி - உங்களுக்கு எப்படி தெரியும். பின்னாடி பொண்ணு இருக்குன்னு.

கெளதம் - உனக்கு முன்னாடியே பார்த்துட்டேன்.

சிம்பு- கில்லாடி சார் நீங்க .

கெளதம் - என்ன நேர புகழாதே.

சிம்பு - அப்போ கொஞ்சம் இருங்க, உங்க முதுகு பின்னாடி போயிட்டு புகலறேன்.

கெளதம் - உஷாரா பின்னாடி போறேன்னு, அந்த பொண்ணு கிட்ட போறதுக்கா. ஒன்னும் என்ன புகழவேண்டாம். உட்க்கார்.