6 January 2010

அந்நியன் - ஒரு லொள்ளு

அந்நியன் - இப்போ நீங்க பார்த்து முடிச்சது சினிமா போடுறதுக்கு முன்னாடி வருமே ஆர்ட் பிலிம் இல்லை. இது நாம கபாலீஸ்வரர் கோவில்ல , பீச் ல, பார்க்குல இப்படி பல இடங்கள்லே பிச்சை எடுக்குற நேரத்துல நாம தவறவிட்ட அழகான சூப்பர் பிகுருங்க. எந்த ஒரு அழகான பிகரா இருந்தாலும் கண்டிப்பா கோவில் வருவாங்க அதுவும் தொடர்ந்து வருவாங்க. அதுவும் பண்டிகை சீசன் ல எக்கச்சக்கமா வருவாங்க. ஆனா நம்மளால ஒரு நல்ல பிகருகூட கரெக்ட் பன்னமுடியலை . ஒரு நாளைக்கு குறைஞ்சது ஐநூறு முதல் ஆயிரம் சம்பாதிக்கு நம்மால் ஒரு நல்ல பிகரு கூட கரெக்ட் பன்னமுடியலை. அனால் வேலை வெட்டி இல்லாமல் இருப்பவனெல்லாம் டக்கரான பிகரை எல்லாம் பிக்கப் பன்னி ஓட்டரானுங்கனா அதுக்கு என்ன காரணமுன்னு நினைக்கிறீங்க. நம்ம பசங்க ஏன் அந்த பொண்ணுகள பிக்கப் பண்ணனுமுன்னு நினைக்கலை. பிரச்சினை என்னனு உங்களுக்குதெரியுமா.

சங்கத்து ஆளு - அந்த பொன்னுங்க தினைக்கும் குளிப்பார்கலாம் .

சங்கத்து ஆளு - குளிக்கறது மட்டும் இல்லை துணியை துவச்சி வேற போட்டுக்குவாங்களாம்.

சங்கத்து ஆளு - அது கூட பரவா இல்லை பல்லு வலக்கிட்டு தான் சாப்பிடு வாங்கலாம்.

அந்நியன் - அவங்க குளிப்பாங்க, அவங்க துவைச்ச துணி போட்டுக்குவாங்க, அவங்க பல்லு வலக்கு வாங்கன்னு சொல்றியே, எப்ப வாச்சும் நீ இதை செஞ்சிருக்கியா. இல்லை அதபத்தி எப்பவாச்சும் யோசிச்சி இருக்கியா. எல்லா தப்பும் நம்ம மேல வெச்சிகிட்டு அவங்க மேல பலி போட்ட என்ன அர்த்தம். அந்த மாதிரியான பிகருகளை பிக்கப் பண்ணறதுக்கு குளிக்கனுமுன்ன நம்ம தல எழுத்துன்னு நினைச்சி நாம குளிக்க வேண்டியது தான். அவங்களுக்காக பல்லு வழக்கனுமுன்னா நம்ம முன்னோர்கள செய்த பாவம்னு
அவங்களுக்காக பல்லு வலக்கனுமுன்ன நம்ம முன்னோர்கள செய்த பாவம்னு நினைச்சு பல்லு வலக்கிக்க வேண்டியது தான். அத விட்டுட்டு இது எல்லாம் ஒரு காரணமா சொல்லக்கூடாது.

இது மாதிரித்தான் போன வாரம் கபாலீஸ்வரர் கோவில் வாசல்ல இவன் பிச்சை எடுத்து கிட்டு இருந்தான். அப்போ ஒரு அழகான பொன்னு கிணத்துல மீனுக்கு பொறி போட்டு கிட்டு இருந்தது. திடீர்னு தவறி தண்ணிக்குள்ள விழுந்துடிச்சி. நம்ம பையனும் வேகமா தன்னோட தட்டுல இருந்த காசை எல்லாம் எடுத்து ஜேபுல போட்டுகிட்டு அந்த பொன்னை காப்பாத்த போனான்.

சங்கத்து ஆளு - நல்ல விஷயம் தானே தலைவரே.

அந்நியன் - இரு நான் இன்னும் சொல்லி முடிக்கலை. தண்ணிக்குள்ள குதிக்கிற நேரத்துல அஞ்சு காசு ஜேபுல இருந்து தண்ணி உள்ள விழுந்துடிச்சி. இவன் என்ன பண்ணானா அந்த பொன்னை காப்பாத்தாம தண்ணியில குதிச்சி அந்த அஞ்சு காசு தேடிகிட்டு இருக்கான். அதுக்குள்ள அங்க வேற ஒருத்தன் வேலை இல்லாம அங்க நேரத கழிக்குற ஒருத்தன் அந்த பொன்னை காப்பாத்திட்டு அவளையே கல்யாணம் பண்ணிக்கிட்டு அந்த பொண்ணு அப்பாகிட்டே வேலை பார்க்கறான். இதே இவன் செஞ்சி இருந்தா சூப்பர் பிகரு பிக்கப் பண்ணி இருக்கலாம். அப்படி நடந்து இருந்தா நம்ம இனத்துக்கு தானேபெருமை. இப்ப சொல்லுங்க இவனை என்ன பண்ணலாம்.


சங்கத்து ஆளு - இவனை எல்லாம் தண்ணியிலேயே முக்கி சாவடிக்கணும்.


அந்நியன் - சரி தான். நானும் அத்தான் செஞ்சேன். இன்னொருத்தன பத்தி சொல்றேன் பாருங்க. பீச் ல இவனுக்கு பிச்சை எடுக்குற டூட்டி. இவன் நடந்து போகுற வழியில ஒரு சேடு பிகரு செம கலரு. அந்த பொன்னு தடிக்கி விழும்போது இவன் தாங்கி பிடிச்சிட்டன். இருட்டுல இவனோட முழு தெரியலை. இவன் ஆளுக்கு துணி பீச் லைட் ல ஒரு வித்தியாசமான காலரா தெரிஞ்சதனால அவளும் இவனுக்கு நன்றி சொல்லி பேச ஆரம்பிச்சி இருக்காங்க. இதை பயன் படுத்தி அந்த பிகர கரெக்ட் பண்ணாம , திடீர்னு இவனுக்கு எதோ வாசனை தட்டுப்பட அதை நோக்கி ஓடிட்டான். அங்க போயி பார்த்தா மீத முல்லா பிரியாணி எவனோ வெளியில போட்டு இருக்கான். அதுக்காக நாயி கூட சண்டை போட்டு சாப்பிட்டு கிட்டு இருக்கான் . இவனை என்ன செய்றது.

நபர் - பிரியாணி சாப்பிட வெச்சே இவனை கொல்லனும்.

அந்நியன் - அதையேதான் நான் செஞ்சேன். முதல்ல அஞ்சு புல்லு சாப்பிட்டு முடிச்சிட்டான். அப்புறம் வயத்துல இடம் இல்லை. அதையும் மீறி சாப்பிட்டான். வைத்தால வாயாலா போயி வயிறு வீங்கி செத்துட்டான். இனிமே எவனாச்சும் இந்தமாதிரி கிடைச்ச வாய்ப்பை தவரவிட்டா எல்லோருக்கும் இந்த கதிதான். சும்மா லிஸ்ட் போட்டு தூக்கிடுவேன்.

சங்கத்து ஆளு - என்ன இருந்தாலும் சட்டத்தை நீங்க கைல எடுத்துக்கறதா.

அந்நியன் - நான் எங்கடா சட்டத்த கைல எடுத்துகிட்டேன். வெறும் தட்டு தானடா என்கிட்டே இருக்கு. நெக்ஸ்ட்

நபர் - இந்த சின்ன தப்புக்கு கொலை செய்றது ரொம்ப தப்புதான்.

அந்நியன் - தப்பு சின்னதா பெரிசா பார்க்காதீங்க, பிகரு சூப்பரா சப்பையா மட்டும் பாருங்க. எல்லாமே எக்ஸ்ட்ரா லார்ஜ் தான்.

சங்கத்து ஆளு - இது சரியா புரியலையே.

அந்நியன் - எனக்கு கூடத்தான் புரியலை. கண்டுக்காத. சரி நான் எஸ்கேப் ஆகுற நேரம் வந்தாச்சி, லைட்ஸ் ஆப்.


பின் குறிப்பு - பிச்சைக்காரர்களை கிண்டல் பண்றது தப்பு அது இதுன்னு யாரும் மொக்கை போடவேண்டாம் என்று கதறி கேட்டுக்கொள்ளப்படுகிறது. இது வெறும் நகைச்சுவைக்காகமட்டுமே.






2 comments:

கலையரசன் said...

பின்குறிப்புதான்யா சிரிப்பே...

Henry J said...

தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. http://simplygetit.blogspot.com/2009/12/make-money-online-100-orginal-ptc-site.html

Post a Comment