28 December 2010

குட்டிக் கவிதைகள்

காமம்

காமம், இச்சை தீற காதல் வேஷம் தறிக்கும்.
உலகில் காதல் தனிச் சொல் அல்ல.
அது அரிதாரம் பூசிக்கொண்ட வக்கிரச் சொல்.
கருத்த, இளைத்த, ஆணிடம் பெண்,
பெண்ணிடம்  ஆண்,
முதல் காதல்க் கொள்ளாததே சாட்சி.

************************************
மனிதன்

புலி ஊருக்குள் புகுந்தது என்றார்,
யானைகள் வீதிகளில் வருது என்றார்,
பாம்பு வீட்டுக்குள் நுழைந்தது என்றார்,
கானகம் அழித்து அங்கே
ஊரை உருவாக்கிக்கொண்ட மனிதர்கள் .

************************************* 

அவள் மனம்


அவள் கூந்தல் வழி வீழ்ந்த பூ ஒன்று
என் ரகசிய பொருள் ஆனது.
அது நொடிக்கொரு வாசம் வீசுகிறது.
மல்லிகை வாசம்,
அடுத்த நொடி ரோஜா,
...பின்னொருமுறை செம்பருத்தி.
விந்தை என்னவெனில்
அது நிகழ்ந்துக் கொண்டே இருக்கிறது
ஐந்தாண்டுகள் ஆகியும்.

No comments:

Post a Comment