18 May 2009

சிரிப்பு வரலை.... சிரிப்பு வரலை

நாம குழந்தையா இருக்கும் போது தினைக்கும் 300 தடவை சிரிப்போமாம். அதே நாம பெரியவர்களா ஆனதுக்கு பிறகு நாம தினைக்கும் 5 அல்லது 6 தடவைதான் சிரிக்குரோமாம். இது நான் சொல்லலை. ஒரு ஆய்வுல கண்டு பிடிச்சி இருக்குறாங்க. இப்போ நாம ஒன்னு கண்டு பிடிப்போம். என் அவங்களால சிரிக்க முடியலை னு நாம கண்டுபிடிப்போம். ரொம்ப ஆழமா இல்லேன்னாலும் , மேலோட்டமா ஆவது கண்டுபிடிக்க முயற்சி செய்வோம்.


பிகரு செட் ஆகுற வரைக்கும் நண்பனுக்கு அறிமுகம் செய்யாதே.

ஒரு வருஷம் கஷ்டப்பட்டு ஒரு பிகரு பிக்கப் பண்ணி அதை தன்னோட நண்பனுக்கு அறிமுக படுத்தினா, அதை அந்த நண்பன் ரெண்டே வாரத்துல பிக்கப் பண்ணி கடைசியில இவனை கட் பண்ணி விட்டா எப்படி சிரிப்பு வரும் நம்ம பசங்களுக்கு.


மனைவி ஜாக்கிரதை

தன்னோட மனைவி தன்னை பத்தியே நினைச்சிகிட்டு இருக்கும் என்று ஆபீஸ் ல கணவன் நினைச்சிகிட்டு இருக்கும் போது, அவ ஒரு ப்லாக் ஓபன் பண்ணிக்கிட்டு தன்னோட முட்டாள் புருஷன் இது வரை ஒன்னும் பண்ணலை னு எழுதிகிட்டு இருக்கு என்று யாரோ இவன்கிட்ட சொன்னா எப்படி தான் அவனுக்கு சிரிப்பு வரும். எங்கே அவன் சிரிக்கறது.


தூக்கம் வருது

கல்யாணம் ஆகி, முதல் இரவில 12 மணிவரை பேசிட்டு சரி சீக்கிரம் தூங்கு இல்லேன்னா காத்தால ஆபீஸ் லேட் ஆகுமுன்னு புருஷன் சொன்னா எங்கே அந்த பொண்ணு சந்தோசமா இருக்குறது. எங்கே அவங்க சிரிக்கறது.


மிடில் கிளாஸ் மனிதர்கள்

எப்படியாவது இருக்குற இடத்தில ஒரு சொந்த வீடு வாங்கனுமுன்னு தங்களோட சம்பளத்துல கொஞ்சம் , கொஞ்சமா பணம் சேர்த்து வச்சா , பணம் மொத்தமா வற்ற நேரத்துல வீட்டு மதுப்பு மூணு மடங்கு , நாலு மடங்கு போக, வீடு வாங்கமுடியாம போயி அந்த காசு வேற ஒரு காரியத்துக்காக செலவு செஞ்சதுக்கு அப்புறம் மறுபடியும் வீடு மதிப்பு பழைய நிலைக்கே வந்து நின்னது தெரிஞ்சா எப்படி சந்தோசமா இருப்பார்கள் இவர்கள். எங்கே சிரிப்பது இவர்கள்.


தலையில சனி

பங்கு சந்தையில அதுவரை மேலே போயிகிட்டு இருக்கும் பங்குகள் இவன் வாங்க ஆரம்பிச்சதுமே இறங்க ஆரம்பிச்சா எங்கே சிரிக்கறது இவங்க.


பிள்ளை வறம்

கல்யாணம் ஆயி பத்துவருசமா பொறக்காத குழந்தை. பக்கத்துல இருக்குற சாமியாரை பார்த்துட்டு வந்ததுக்கு பிறகு பொறந்தா, எப்படி வரும் இவங்களுக்கு சிரிப்பு.


குழந்தை யார்போல

குழந்தை பொறந்தா நாள் விழாவுல , குழந்தை பார்க்கறதுக்கு அவங்க அப்பா மாதிரியே இருக்குன்னு பக்கத்து வீட்டுக்காரனை காட்டினா அந்த குழந்தையோட அப்பனுகுக்க் எப்படி சிறுப்பு வரும்.


இப்படி நிறைய காரங்கலால மக்களால சிரிக்க முடியலை. இது வெறும் சாம்பிள் தான். இன்னும் எத்தனையோ இருக்கு இதுமாதிரி.


நான் சும்மா கலாய்ச்சி இருந்தாலும் இதுல கொஞ்சம் உண்மை னு எனக்கு தோனுது. உங்களுக்கும் தோனுச்சினா பின்னூட்டம் எழுதி தெரிவியுங்க.




1 comment:

எட்வின் said...

//நாம குழந்தையா இருக்கும் போது தினைக்கும் 300 தடவை சிரிப்போமாம். அதே நாம பெரியவர்களா ஆனதுக்கு பிறகு நாம தினைக்கும் 5 அல்லது 6 தடவைதான் சிரிக்குரோமாம்//

உண்மையாகவே படுகிறது

Post a Comment